#BREAKING: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் அரசு அலுவலர்கள், ஆசியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஏப்ரல் 1 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்றுள்ளனர்.