விடுமுறை நாட்களில் அலுவலகம் நடத்தும் பெரிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை அதிகரித்தும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்பர்களின் காப்பீட்டு தொகையை உயர்த்தும் சட்ட திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் அமைச்சர் நிலோபர் கபில் இன்று அறிவித்தார்.
இன்று சட்டமன்றத்தில் அமைச்சர் நிலோபர் கபில் இரண்டு சட்ட மசோதாக்களை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது, விதியை மீறி தேசிய மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் அலுவலகம் நடத்தும் பெரிய நிறுவைங்களின் அபராத தொகை கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தபடவில்லை எனவே அதை உயர்த்தி சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
அதன்படி 1958 ஆண்டு தொழிற்நிறுவனங்கள் சட்டத்தின் 8ம் சட்ட பிரிவில் உள்ள 1000 ரூபாய் அபராதம் 5000 ருபாயாகவும், 2500 ரூபாய் அபராதம் 10000 ருபாயாகவும். 9ம் சட்ட பிரிவில் உள்ள 500 ரூபாய் அபராதம் 1000 ருபாயாகவும். 12ம் சட்ட பிரிவில் உள்ள 500 ரூபாய் அபராதம் 5000 ருபாயாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கான காப்பீட்டுத்தொகையை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதாவையும் தாக்கல் செய்தார். அதன்படி, 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 7- AA எனும் பிரிவில் 50000 என்பதற்கு பதில் ஒரு லட்சம் என மாற்றப்பட்டுள்ளது.
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…