எந்த தேர்தல் விவகாரங்களையும் ஊடகங்களில் காட்சிப்படுத்த தடை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

இன்று மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு, பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்த தேர்தல் விவகாரங்களையும் ஊடகங்களில் காட்சிப்படுத்த தடை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில்,இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் இருந்து இன்று  மாலை 6 மணிக்கு மேல், வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், கட்சிப் பணியாளர்கள் வெளியேற வேண்டும்.

இன்று  மாலை 6 மணி முதல் கருத்துக் கணிப்பு, பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட எந்த தேர்தல் விவகாரங்களையும் ஊடகங்களில் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல்  11-ஆம் தேதி முதல் காலை 7 மணி முதல் வரும் 19-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Leave a Comment