தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி – கம்பீர் உருக்கம்..!

தோனி கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர் தோனி தான். கேப்டனாக அவர் செய்த சாதனைகள் எந்த ஒரு வீரராலும் நிகழ்த்த முடியாதது. இந்த சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் பல ரசிகர்கள் வருந்தினர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த வருடம் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். இந்தநிலையில் இதுவரை சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிவிவரப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மேலும் அண்மையில் சென்னை அணி நிர்வாகம் 2021 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணி கேப்டனாக தோனி இருப்பார் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், “சிஎஸ்கே நிர்வாகம் தோனிக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. அனைத்து விதமான மரியாதை மற்றும் சுதந்திரத்தை தோனி பெறுகிறார்.

இவர்களுக்கு இடையே நல்ல நட்பு மட்டும் நல்ல உறவுகள் உள்ளது. அடுத்த வருடம் தோனிதான் கேப்டனாக இருப்பார் என்று அறிவித்தது ஆச்சரியம் அளிப்பது ஒன்றும் இல்லை. தோனியால் விளையாட முடியும் வரை விளையாடுவார் மும்பை அணிக்கு பிறகு ஒரு நல்ல அணியை அவர் உருவாக்கியுள்ளார்.

அடுத்த வருடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியாக இருப்பார் என்று ஐபிஎல் நிறுவனம் அறிவித்தது இதனால் தோனியும் விசுவாசமாக இருக்கிறார். இந்த நிலையில் தோனி அவருடைய ஆன்மா, இதயம் தூக்கமில்லா இரவுகள் அனைத்தையும் கொடுக்கிறார். தோனி கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…

21 mins ago

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்.! மக்கள் கடும் அவதி!

Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…

1 hour ago

நிறைவு பெற்ற இரண்டாம் கட்ட தேர்தல்…88 தொகுதிகளில் 63.50% வாக்குப்பதிவு.!

Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…

1 hour ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…

2 hours ago

பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!

பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…

3 hours ago

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

9 hours ago