இனியும் பெண்களை புறக்கணிக்க முடியாது- நிர்மலா சீதாராமன்

இனியும் உயர் பதவிகளில் பெண்களை புறக்கணிக்க முடியாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் அவர் நேற்று மும்பையில் நடந்த பெண் இயக்குனர்கள் மாநாட்டில் கூறியதாவது, நாங்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வாய்ப்பு தாருங்கள் என்று கேட்க வில்லை, உங்களுக்கு அதிக லாபம் வேண்டுமென்றால் பெண்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று கூறியுள்ளார். பெண்கள் தலைமைப் பதவி வகிக்கும் பல நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டியுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். … Read more