தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு மரியாதை..!

சென்னை, எழும்பூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு மரியாதை.  இன்று தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள்  அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை, எழும்பூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு மரியாதை செலுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.