சுனில் சேத்ரி: இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி, தான் சமீபத்தில் அறிவித்தது போல கால்பந்து உலகக்கோப்பை தகுதி சுற்றில் குவைத் அணியுடனான போட்டிக்கு பிறகு சர்வேதச கால்பந்து போட்டிகளிலிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தகுதி சுற்றில் இந்திய அணி, குவைத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த சார்வதேச போட்டியில் இறுதியாக சுனில் சேத்ரி களம் கண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் போட்டி 0-0 என சமனில் முடிவடைந்தது.
மேலும், போட்டி முடிவடைந்த பிறகு அவருடன் விளையாடும் சக இந்திய வீரர்கள் அனைவரும் அவருக்கு மரியாதையுடன் கை கொடுத்தும், கை தட்டியும், கட்டி அனைத்தும் மரியாதை செய்தனர். கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதை நினைத்த சுனில் சேத்ரியும் கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க விடைபெற்றார்.
இவரது, இந்த குவைத் உடனான கடைசி சர்வேதச போட்டியானது கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் திடலில் நடைபெற்றது. இந்த போட்டியை காண உலகெங்கிலும் உள்ள சுமார் 50,000க்கும் அதிகமான அவரது ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர் கண்ணீர் மல்க மைதானத்திலிருந்து வெளியேறும் வீடியோவை X தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர்.
மேலும், இந்திய கால்பந்து அணி நிர்வாகமும் அவரது புகைப்படத்தை அவர்களது X தளத்தில் பகிர்ந்து நன்றி கூறி உள்ளனர். பார்ப்போரை கலங்க வைக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
பிசிசிஐ : இந்த ஆண்டில் நடைபெற்று வந்த மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த தொடர் தான் 20 ஓவர் உலகக்கோப்பை தொடராகும். இந்த தொடரில் இந்திய அணி மிக பிரமாதமாக…
பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை தாக்கிய விவகாரத்தில், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பெண் காவலர் குல்விந்தர் கவுர், மீண்டும் பணியில்…
சிவகார்த்திகேயன் : இயக்குனர் எச்.வினோத் அடுத்ததாக விஜயின் 69-வது திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. தகவல்களாக வெளியாகி இருக்கிறது என்பதை தவிர அதிகாரப்பூர்வமாக எந்த…
ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என…
ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின்…
தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில்…