மீண்டும் இணைகின்றனர் சுந்தர் .சி – விஷால் கூட்டணி !!!!!

இயக்குனர் சுந்தர் சி நடிகர் சிம்புவை வைத்து “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தை  தற்போது இயக்கி வருகிறார்.இதற்கான படப்பிடிப்பு வேலைகள் நன்றாக நடைபெற்று வருகிறது. லைக்கா புரொடுக்க்ஷன் இந்த படத்தை தயாரித்து வருகிறது.மேலும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் ‘அத்தரண்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.இதனை இயக்குனர் பவன் கல்யாண் இயக்கியுள்ளார்.
நடிகர் விஷால் சுந்தர் சி இயக்கத்தில் ‘ஆம்பள’ என்ற படத்தை நடித்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .மேலும் சுந்தர் சி  “மதகத ராஜா” என்ற படத்தை நடிகர் விஷாலை வைத்து  இயக்கியுள்ளார்.இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
‘ மதகத ராஜா’ படத்தை தொடர்ந்து சுந்தர் சி- விஷால் கூட்டணியில் 3 வதாக மீண்டும் ஒரு புதிய படம் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தை ‘லைக்கா நிறுவனம்’ தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனை கேட்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Leave a Comment