சுந்தர் சி : அரண்மனை 4 எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள சுத்தர் சி இந்த படத்திற்கு முன்னதாக காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாமல் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.
இந்த படத்தின் தோல்வியை தொடர்ந்து ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இருப்பினும், காபி வித் காதல் திரைப்படத்தினை குஷ்பு தயாரித்திருந்தார். எனவே, படம் தோல்வி ஆனதை பார்த்து அவருடைய மகள் அனந்திதா கதறி அழுதுள்ளார்.
இந்த சம்பவத்தை நடிகை குஷ்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய நடிகை குஷ்பு ” சுந்தர் சி அரண்மனை 4 படத்திற்கு முன்னதாக காபி வித் காதல் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் எனக்கும் என்னுடைய மகள்களுக்கும் பிடிக்கவே இல்லை. படம் வெளியான பிறகு என்னுடைய இளைய மகள் அனந்திதா கதறி அழுதார்.
என்னுடைய மகள் தேம்பி தேம்பி அழுத காரணத்தால் கண்டிப்பாக ஒரு ஹிட் படத்தை கொடுத்த ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்க திட்டமிட்டு கதை எழுத தொடங்கினார். 1.5 ஆண்டுகள் அந்த படத்திற்காக வேலை செய்து மகளுக்காக படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார்” எனவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.
சேலம்: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது என இபிஎஸ் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஜூலை 5ஆம் தேதி…
அபிஷேக் சர்மா : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக…
சென்னை : பாசனத் தொட்டிகள், குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து வண்டல்மன் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள்…
வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு : தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணிகளுக்கு…
டெல்லி: 3 நாள் பயணமாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் ரஷ்யா சென்றடைய உள்ளார். பிரதமர் மோடி இன்று…
சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக…