நியாமி புறநகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் திடீரெனெ ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டின் தலைநகரான நியாமியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த தொடக்கப்பள்ளியில் சில வகுப்பறைகள் பள்ளி கட்டிடத்துக்குள்ளும், பள்ளிக்கு வெளியே வைக்கோலால் செய்யப்பட்ட குடிசைகளிலும் சில வகுப்பறைகள் நடைபெற்று வந்தது. அப்பள்ளியில் சுமார் 2,000 பேர் வரை கல்வி பயின்று வருவதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சற்றுநேரத்திலே தீ மளமளவென பள்ளி முழுவதும் பரவியதால், மாணவர்கள் பலரும் உள்ளே சிக்கிக் கொண்டனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
ஆயினும், தீயில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். பள்ளியில் திடீரென தீ பிடித்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…