எஸ்.சி, எஸ்.டி தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம் – அமைச்சர் கயல்விழி

ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும்.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கயல்விழி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, 200 நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாய தொழிலாளர் நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படும். 1,000 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் துரித மின் இணைப்புத் திட்டத்தில் இணைப்பு திட்டத்தில் மின் இணைப்பு பெற மானியம் வழங்கப்படும். துரித மின் இணைப்பு திட்டத்திற்காக 90% மானியம் வழங்க ரூ.23.37 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.