பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 59,582 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 97 புள்ளிகள் குறைந்து 59,582 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,593 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை வாரத்தின் 4-வது நாளான இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 59,538 புள்ளிகள் என சரிவில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 49.48 புள்ளிகள் அல்லது 0.083% என சரிந்து 59,582 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 31.15 புள்ளிகள் அல்லது 0.18% சரிந்து 17,593 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,632 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,624 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

எச்சிஎல் டெக்னாலஜிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. நெஸ்லே இந்தியா, மாருதி சுசுகி இந்தியா, பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், டெக் மஹிந்திரா, ஐடிசி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Leave a Comment