பள்ளி மாணவன் உயிரிழப்பு – பள்ளி தாளாளருக்கு போலீஸ் நோட்டீஸ்!

சென்னையில் வேன் மோதி மாணவன் இறந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் போலீஸ் நோட்டீஸ்.

சென்னையில் வளசரவாக்கம் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 7 வயது மாணவன் உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 கேள்விகளுக்கு 2 நாட்களில் விளக்கமளிக்க பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ்க்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவன் தீக்சித் விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்கு அனுப்பிய நோட்டீசை சுட்டிக்காட்டி வளசரவாக்கம் காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இந்த விவகாரத்தில் வேன் ஓட்டுநா் பூங்காவனம், வேனில் இருந்து குழந்தைகளை இறங்கிவிடும் பள்ளி ஊழியர் ஞானசக்தி, பள்ளித் தாளாளா் ஜெய சுபாஷ், பள்ளி முதல்வா் தனலட்சுமி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநர் பூங்காவனம், ஊழியர் ஞானசக்தி ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்திருந்தது.