Schoo Bus Vehicles in Haryana [Photo Generated By AI]
ஹரியானா : ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பலரும் பயணிக்கும் ஒரு முக்கிய சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான தில்லி பப்ளிக் பள்ளியிலிருந்து 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று கடந்த ஜூலை-04 ம் தேதி வியாழன்று ஹிசாரில் உள்ள மேயர் கிராமம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பள்ளிப்பேருந்து அங்கு நின்று கொண்டிருந்த பைக் உட்பட பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற அந்த நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் பேருந்தில் இருந்த மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் செய்தித் தொடர்பாளர் விகாஸ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விபத்தின் முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் பிரேக் செயலிழந்ததால் தான் இப்படி பல வாகனங்களில் மோதியதாக தெரியவந்துள்ளது. அதே நேரம் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 40 மாணவர்களும், பேருந்து மோதிய காரில் இருந்த 2 பெண்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த கும்பல் ஆத்திரமடைந்து அந்த பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கருதி அவரைத் தாக்கி உள்ளனர்.
அதை தொடர்ந்து அந்த பள்ளி முதலைவரான மஞ்சு பாலா கூறுகையில், ஓட்டுநர் நிதானமாக இருந்ததாகவும், விபத்து குறித்து புகாரளிக்க தன்னை அழைத்ததாகவும் கூறினார். பின் சம்பவ இடத்திற்கு ஊழியர்களுடன் விரைந்து வந்த பள்ளி முதல்வர் காயம் ஏற்பட்ட அந்த பைக் ஓட்டுநரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை உலுக்குவதுடன் ஒரு வித பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி பரவி வருகிறது.
சென்னை : அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் அரியவகை மூளை தொற்றுநோய் பரவல் தொடர்பாக, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த…
இந்தியன் : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் அளவிற்கு இருக்குமா? என்று தான் பலரும்…
மும்பை : மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில்…
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலானது பொத்தூரில் இன்று அதிகாலை 1 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அன்று…
ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே…
மின்தடை : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…