Samsung Galaxy M15: சாம்சங் நிறுவனம் தனது Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் தனது M சீரிஸில் அடுத்த மாடலான Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். Galaxy M15 5G -இன் வடிவமைப்பு மற்றும் ஹார்ட்வேர் விவரங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் வெளியான Galaxy A15 5G ஐப் போலவே உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனானது 6.5-இன்ச் முழு-HD+ (1,080×2,340 பிக்சல்கள்) Super AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. டிஸ்ப்ளேயில் செல்ஃபி ஷூட்டரை வைக்க, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உள்ளது.
Galaxy M15 5G ஆனது 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மூலம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.கேமரா யூனிட்டில் 5 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு, 13 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி-யின் ஆரம்ப விலை 4ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் ரூ.12,999 ஆகவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் ரூ. 14,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளூ டோபஸ், செலஸ்டியல் ப்ளூ மற்றும் ஸ்டோன் கிரே ஆகிய மூன்று நிறங்களில் வெளிவந்துள்ளது. HDFC கார்டை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1,000 தள்ளுபடி வழங்கபடுகிறது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…