தோனியின் 200-வது போட்டியில் பார்வையாளராக கலந்து கொண்ட சத்குரு..!

சென்னை அணியின் கேப்டன் தோனியின் 200-வது போட்டியில் பார்வையாளராக சத்குரு கலந்து கொண்டார்.

200-வது போட்டி :

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே அணிக்காக தனது 200-வது போட்டியில் கேப்டனாக பங்கேற்றார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து தோனி சென்னை அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அவருக்கு கீழ் சென்னை நான்கு முறை (2010, 2011, 2018 மற்றும் 2021) ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. தோனியின் தலைமையின் கீழ் சிஎஸ்கே இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ளது.

சத்குரு வருகை :

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியை காண திறலான ரசிகர்கள் வந்திருந்தனர், அவர்களுடன் சத்குருவும் இப்போட்டியை கண்டுக்களித்தார்.

சென்னை vs ராஜஸ்தான் :

மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 175/8 ரன்கள் குவித்தது. அதன்பின்,176 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் கான்வே(50 ரன்கள்) அரைசதமடித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே அதிரடியாக விளையாடி 31 ரன்கள் குவித்தார்.

ஆட்டத்தின் இறுதி வரை பரபரப்பாக சென்ற போட்டியில், கடைசி ஓவரில் 21 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், அணியின் கேப்டன் தோனி 2 சிக்ஸர் அடித்து விளாசினார். இறுதியில் சென்னை 17 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி வெற்றிவாய்ப்பை தவறவிட்டது. ராஜஸ்தான் தரப்பில், அஸ்வின் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

Sadhguru 1

Leave a Comment