வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.11.50 கோடி பறிமுதல்..!

வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.11.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால், பணப்பட்டுவாடாவை தடுக்க ​​வருமான வரித்துறை பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில்,  கடந்த 16-ஆம் தேதி அன்று சென்னையில் ஐந்து இடங்களில் வருமான வரித்துறை சோதனை  மேற்கொண்டுள்ளது.

இந்த ஐந்து இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக ரூ .5.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் சென்னை, தாராபுரம், திருப்பூரில் மொத்தம் 8 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது  கணக்கில் வராத ரூ.11.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கணக்கில் காட்டாத ரூ.80 கோடி வருமானம் கண்டறியப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.