தூக்கத்திற்கான உரிமை – உங்களை தூங்க விடவில்லையென்றால் வழக்குப்பதிவு செய்யலாமாம்..!

தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் மிகவும் இன்றியமையாதது ஆகும். ஒரு மனிதனுடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கம் மிகவும் முக்கியமானது ஆகும். ஒரு மனிதன் உயிர்வாழ உணவு, நீர் எவ்வளவு முக்கியமானதோ, அதே போல் தூக்கமும் முக்கியமானதாகும்.

அதிலும்,ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவில் 8 மணி நேர தூக்கம்  அவசியமானதாகும். நல்ல தூக்கம் நமது வாழ்க்கைத் தரம், மூளை செயல்பாடு, மனநிலை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தூக்கமின்மை நமது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கலாம்,  மேலும் இது பல உடல்  ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்ப்டுத்தக் கூடும்.

தூக்கம் ஒரு  அடிப்படை உரிமை 

sleep
sleep [Imagesource : Representative]

இந்தியாவை பொறுத்தவரையில் தூங்கும் உரிமை அடிப்படை உரிமை என்பது உங்களுக்குத் தெரியுமா? அரசியலமைப்பின் சட்டம் 21 வது பிரிவின் கீழ் ஒவ்வொரு குடிமகனும் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக உறங்க உரிமை உண்டு.

சட்டப்பிரிவு 21ன் படி, ‘உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமை’யின் கீழ் தூங்குவதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர, எந்தவொரு நபரின் வாழ்க்கை அல்லது தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படாது.

2012 ஆம் ஆண்டு டெல்லியில் பாபா ராம்தேவ் நடத்திய பேரணியில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது காவல்துறையின் நடவடிக்கை குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது காவல்துறையினரின் நடவடிக்கை அடிப்படை உரிமை மீறலுக்கு வழிவகுத்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், ஒரு மனிதனின் இருப்பு மற்றும் உயிர்வாழ்வதற்குத் தேவையான மென்மையான ஆரோக்கிய சமநிலையை பராமரிக்க தூக்கம் அவசியம். எனவே, தூக்கம் என்பது ஒரு அடிப்படைத் தேவை, தூக்கம் இல்லாவிட்டால் அது மனிதனுடைய வாழ்க்கையில் ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதேபோல் தூக்கம் ஒரு அடிப்படை மனித உரிமை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கை கூறுகிறது.

மத்திய பிரதேசத்தில், சயீத் மக்சூத் அலி என்பவர் தொடர்ந்த வழக்கில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி, ஒழுக்கமான சூழலில் வாழ உரிமையுண்டு, இரவில் நிம்மதியாக உறங்கும் உரிமையும் உண்டு என்று கூறியது. “உறக்கம் என்பது விழித்திருந்தால் ஏற்படக்கூடிய சில தொல்லைகளுக்கு சிறந்த மருந்து என்றும், உழைப்பாளியின் தூக்கம் இனிமையானது என்றும் கூறப்படுகிறது.

தூக்கம் அமைதியைத் தரும். தூக்கமின்மை செறிவு, எரிச்சல் மற்றும் செயல்திறன் குறைவதை உருவாக்குகிறது. மௌனம் மனதை உற்சாகப்படுத்துகிறது, உடலை உற்சாகப்படுத்துகிறது மற்றும் ஆன்மாவை அமைதிப்படுத்துகிறது என்பதை மறந்துவிட முடியாது. சரியான தூக்கம், அமைதியான வாழ்க்கைச் சூழல் மற்றும் இடையூறு இல்லாத சிந்தனை போன்ற  மற்றவர்களின் உரிமைகளைப் பாதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.