நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய வயதில் இருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இதனை அவர் பல பேட்டிகளிலேயே தெரிவித்தும் இருக்கிறார். அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் பல மேடைகளிலும் ரஜினியின் குரலை தான் மேமிக்ரி செய்திருக்கிறார்.
அப்படி இருந்த சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ள நிலையில், அவர் ஒரு படத்திலாவது ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதற்கான ஒரு வாய்ப்பும் அவருக்கு ஜெயிலர் படத்தில் வந்ததாம். ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் தான் இயக்கி இருந்தார்.
எற்கனவே, சிவகார்த்திகேயன் நெல்சனின் நெருங்கிய நண்பர் எனவே ஜெயிலர் படத்தில் அவரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தாராம். ஆனால், சில காரணங்களால் ஜெயிலர் படத்தில் சிவகார்திகேயனால் நடிக்க முடியாமல் போய்விட்டது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்து இருக்கிறதாம்.
அதன்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள “தலைவர் 171” படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே அவரால் ஜெயிலர் படத்தில் நடிக்க முடியாமல் போன நிலையில் இந்த முறை அவர் தலைவர் 171 படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியும் ஆகிவிட்டதாம்.
வழக்கமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் எல்லாம் பல முன்னணி நடிகர்கள் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார்கள். எனவே, சிவகார்த்திகேயனும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும், ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு 171-வது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…
சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…
சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…
சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…
சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…
Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…