pushpa 2 [file image ]
புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா . படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது புஷ்பா 2 படம் குறித்து ஆங்கில இதழ் ஒன்று எழுதியுள்ள செய்தி சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. அது என்ன செய்தி என்றால், படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் சுகுமார் புஷ்பா கோபத்தில் தனது ஐபோனை வீசி உடைத்த செய்தி தான். இந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சியை படமாக்கும் பணியில் நடிகர்கள் யாரும் சரியாக நடிக்கவில்லை என்பதால் சுகுமார் மிகவும் கோபமடைந்துவிட்டாராம்.
இதன் காரணமாக தான் கடும் கோபத்தில் இயக்குனர் சுகுமார் போனை உடைத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் இந்த தகவல் பற்றி அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் இதனை பற்றி இயக்குனர் சுகுமார் அல்லது படக்குழு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த புஷ்பா 2 திரைப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீதேஜ், அனசூயா பரத்வாஜ், திவி வத்யா, ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…
புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…
நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…
மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…