மூன்றாவது போட்டியில் ஷுப்மன் கில்-ஐ நீக்குங்கள்- அஜய் ஜடேஜா

3-வது டி-20 போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்ய விரும்பினால், ஷுப்மன் கில்-ஐ நீக்குங்கள் என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான நேற்று நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி, 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியுற்றது. இலங்கை அணி நிர்ணயித்த 207 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்கமே சரியாக அமையவில்லை.

அக்சர் படேல் மற்றும் சூர்யகுமார் யாதவ் தவிர யாரும் நிலைத்து நிற்கவில்லை, ஒற்றை இலக்க ரன்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து 16 ரன்களில் தோல்வியடைந்தது. தொடரில் 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமநிலை வகிக்கிறது.

மேலும் இந்த தொடரில் அறிமுகமான ஷுப்மன் கில் பெரிதாக எதுவும் விளையாடவில்லை, இரண்டு போட்டியிலும் 7 மற்றும் 5 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். இரண்டாவது போட்டியில் அவர் அவுட் ஆன விதம் பார்க்கும்போது அவரிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

அடுத்த போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால், சுப்மன் கில்-ஐ அணியிலிருந்து நீக்குங்கள் என அஜய் ஜடேஜா மேலும் கூறியுள்ளார்.

Leave a Comment