சீனா நிதியிலா? ராஜீவ் அறக்கட்டளை??? ராகுலுக்கு பாஜக நறுக்!

காங்கிரளின் சி  ராஜிவ் அறக்கட்டளைக்கு தற்போது வரை  சீனா நிதி அளித்து வருவதாக  பா.ஜக பகிரங்க  குற்றம்சாட்டி உள்ளது.

லடாக் எல்லையில், இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து, பா.ஜக.,வும், காங்கிரசும் உள்நாட்டில் வார்த்தை போரில் ஈடுபட்டதை நாடே பார்த்தது. லடாக் தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு மீதும், பிரதமர் தும், காங்கிரஸ் எம்.பியும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான  ராகுல் காந்தி, தனது  ‘டுவிட்டர் பக்கத்தில்’ தினமும் இது குறித்து குற்றம் சுமத்தி வருகிறார். ராகுலின் ட்விட்டுக்கு, பா.ஜக., சார்பில், பதில் அளிக்கப்பட்டும் வருகிறது.இவ்வாறு உள்ளே புகைந்து கொண்டிருக்க இதில் மேலும் பற்றவைப்பது போல  மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத்  கூறிய கருத்து அமைத்துள்ளது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: கடந்த, 2017ல், டோக்லாமில், இந்திய – சீன படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட தருணம்.ஆனால் அப்போது இங்கு டில்லியில் இந்தியாவிற்கான சீன துாதரை, ராகுல் காந்தி  ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போதும், நாட்டை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது.காங்கிரஸ் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.அது பற்றி, எதுவும் தெரிவிக்காமல், அக்கட்சி மவுனம் சாதித்து வருவதாகவும் தெரிவித்த அவர்  காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும், ராஜிவ் அறக்கட்டளையின் தலைவராக, சோனியா உள்ளார்.

இக்கட்டளையின்  உறுப்பினர்களாக, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, சிதம்பரம் என உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த அறக்கட்டளைக்கு 2005 – 06ம் ஆண்டில் சீன துாதரகம் நிதி அளித்துள்ளது.இது குறித்து  2005 – 06ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையில், ராஜிவ் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது.

சீனாவிடமிருந்து நிதியுதவி பெறுவது தான், காங்கிரஸ் செய்து கொண்ட ஒப்பந்தமா? இந்த நிதியுதவியால் தான், ராகுல், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ள ரவிசங்கர் பிரசாத் இது குறித்து  காங்கிரஸ்  நாட்டு மக்களுக்கு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

7 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

7 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

12 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

13 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

13 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

13 hours ago