இந்தோனேசியாவிற்கு ராஜ்நாத் சிங் பயணம்..!

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நவம்பர் 16 முதல் 17 ஆம் தேதி வரை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். ஜகார்த்தாவில் நடைபெறும் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில்  (ADMM-Plus) ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் ​​பாதுகாப்பு அமைச்சர் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியா குடியரசு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.