இந்தியா

நான் பேசியதை சேர்த்தே ஆக வேண்டும்… ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்.!

டெல்லி: நேற்று மக்களவையில் நான் பேசியதில் நீக்கிய பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,  உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாகவே தற்போதும் உள்ளனர். பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

மேலும், அக்னிவீர் திட்டம் வீரர்களை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவது போல உள்ளது. இந்த திட்டத்தால் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம், இழப்பீடு கிடைக்கப்பெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மக்களவையில் ராகுல் காந்தி பேசியது ஆதாரமற்ற குற்றசாட்டு என பாஜக எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனை அடுத்து,  ராகுல் காந்தி பேசிய குறிப்பிட்ட கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,  மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது உறுப்பினர்களின் கடமை. அதன்படி தான் நான் கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். என்னுடைய பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியது மக்களவை ஜனநாயகத்திற்கு எதிரானது. நீக்கப்பட்ட எனது பேச்சை அவை குறிப்பில் சேர்க்க வேண்டும். மக்களவை சட்டவிதி 105இன் கீழ் அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச்சுரிமை உள்ளது என சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

11 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

12 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

12 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

12 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

12 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

13 hours ago