இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ரகுராம் ஐயர் நியமனம்..!

இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) நேற்று ரகுராம் ஐயரை  இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக  நியமித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒரு வருடமாக தலைமை நிர்வாக அதிகாரி( CEO) பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.  இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமனக் குழுவால் நடத்தப்பட்ட தேர்வு செயல்முறைக்குப் பிறகு ரகுராம் ஐயர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐஓஏ தெரிவித்துள்ளது.

கவனமாக பரிசீலித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுடன் நேர்காணலுக்குப் பிறகு, நியமனக் குழு ஒருமனதாக ரகுராம் ஐயரை தலைமை நிர்வாக அதிகாரியாகத் தேர்ந்தெடுத்தது” என ஐஓஏ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  ரகுராம் ஐயர் இந்தியன் பிரீமியர் லீக் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் ஆகிய அணிகளின் உரிமையாளர்களுடன் தலைமை நிர்வாக அதிகாரியாக ரகுராம் ஐயர் பணியாற்றியிருக்கிறார்.