#Badminton:பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி!

கொரியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அன் செயோங்கிடம்,பிவி சிந்து தோல்வி.

பால்மா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற கொரியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2022 இன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து,தென் கொரியாவின் அன் செயோங்கை எதிர்கொண்டார்.

ஆட்டம் தொடக்க முதலே,உலகின் நம்பர் 4 தென் கொரிய வீராங்கனை தனது சிறப்பான ஆட்டத்தால் முன்னிலை வகித்தார்.இறுதியில்,பிவி சிந்து 49 நிமிடங்களில் அரையிறுதி ஆட்டத்தில் 14-21 17-21 என்ற கணக்கில் தென் கொரியாவின் அன் செயோங்கிடம் தோல்வியடைந்துள்ளார். இதனால் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பிவி சிந்து தவறவிட்டுள்ளார்.