வரும் 30-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் மோதும் பஞ்சாப் – சென்னை அணிகள்..! நாளை மறுநாள் முதல் டிக்கெட் விற்பனை..!

வரும் 30-ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடைபெறக்கூடிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளது. 

16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உளளது.

டிக்கெட் விற்பனை 

குறிப்பாக சென்னையில் நடை பெறக்கூடிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்  வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடைபெறக்கூடிய போட்டியை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை வரும் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.