பேனிக் பட்டனை அழுத்தியும் எந்த பலனும் இல்லை என்று, டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண் உபெர் டிரைவர் கூறியுள்ளார்.
டெல்லியில், பிரியங்கா தேவி என்ற 30 வயது பெண் ஓட்டுநர் உபெரில் கார் ஓட்டி வருகிறார், இவர் காஷ்மீர் கேட் அருகே சென்று கொண்டிருந்த போது, இரண்டு கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது, பிரியங்கா தேவி, காரில் உள்ள அவசர கால உதவி(பேனிக்) பட்டனை, தான் அழுத்தியும் தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
டெல்லியின் சமய்பூர் பட்லியை சேர்ந்த பிரியங்கா, தான் பாதிக்கப்படும் போது அவர்களிடம் கார் எனக்கு சொந்தமானது அல்ல என்று கூறியும், அந்த கொள்ளையர்கள் என்னை தாக்கினர், நான் சத்தமாக கத்த ஆரம்பித்தபோது, அவர்களில் ஒருவர் என்னை பீர் பாட்டிலால் தாக்கினார். என் கழுத்து மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.
இருவரும் தனது காருடன் தப்பிச் செல்ல முயன்றதாகவும் பிரியங்கா கூறினார். இந்த சம்பவத்தின்போது நான் பேனிக் பட்டனை அழுத்தினேன், உபெரை தொடர்பு கொண்டேன் எதுவும் எனக்கு உதவவில்லை என்று பிரியங்கா தெரிவித்தார்.
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…