பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்..! இராணுவ மருத்துவமனை.!

கடந்த வாரம் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, கடந்த 10-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  டெல்லி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார்.  இதனால், மருத்துவர்கள் தீவிரமாக கவனித்து வருவதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரணாப் முகர்ஜி அவர்களின்  உடல்நிலை மோசமடைந்துள்ளது என டெல்லி இராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இன்று காலை தான் பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி, தனது தந்தையின் உடல்நிலை உடல்நிலை சீராக உள்ளது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.