போதை பிரிவு தடுப்பு போலீசார் சென்னை முழுவதும் அதிரடி சோதனை…!!!

போதை தடுப்பு பிரிவு போலீசார் சென்னை முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கில் தொழில் அதிபர் மாதவராவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் புதிதாக இரண்டு பேர் குட்கா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து போதை தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

போதை தடுப்பு பிரிவு போலீசார் 120 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கி இரவிலும் இந்த சோதனை நீடித்துள்ளது. இந்த சோதனையின் போது கிடைத்த போதை பொருள் குறித்த விபரங்கள் சோதனை முடிவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Leave a Comment