சோகம்…! திருவண்ணாமலை அருகே பிளஸ்டூ மாணவன் தற்கொலை.!

தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதினர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தோல்வி பயத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்ற மாணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம், அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, மாணவர்கள் மனநல ஆலோசனை பெற 14417 என்ற எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தோல்விக்காக யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.