மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன – அமைச்சர் எ.வ.வேலு

மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி. 

பருவமழைக்கு முன்பதாக மழைநீர் வடிகால் பணிகளை முடிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இந்த நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை மாநகராட்சி, நீர் மேலாண்மை துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன. பணிகளை தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வருகிறோம். மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Leave a Comment