ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிப்பதில்லை – அமைச்சர் சிவசங்கர்

ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிக்காது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி.  

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஆமினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் பல்வேறு வகைகள் இருப்பதால் பல்வேறு வகைகளில் கட்டணம் வசூலிப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். பண்டிகை காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கட்டண வசூலிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா காலத்திற்குப் பின் 1400 ஆம்னி பேருந்துகள் தான் இயங்குகிறது. கட்டணத்தை தெரிந்துதான் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். இந்த கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிக்காது என தெரிவித்துள்ளார்.

Leave a Comment