ஐயோ போச்சே..ஆர்சிபி தோற்றதால் கதறி அழுத ரசிகை..! வைரலாகும் புகைப்படம்..!

ஆர்சிபி அணி தோற்றதால் ஸ்டேடியத்தில் கதறி அழுத ரசிகையின் புகைப்படம் இணையத்தில் வைராகி வருகிறது. 

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில், ஆர்சிபி (RCB) அணிக்கும் ரசிகர்கள் அதிகம். ஆர்சிபி ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்றாலும், ஆர்சிபி அணிக்கான ஆதரவு குறையவில்லை.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியடைந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் வெற்றி இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. இதன்பின், லக்னோ அணியினர் அதிரடியாக விளையாடி பெங்களூரு அணியின் பவுலர்களை கலங்கடித்தனர். இறுதியில் லக்னோ அணி, கடைசி ஓவர் வரை த்ரில்லாக சென்ற போட்டியில், 1 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி, தனது 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.

மேலும், லக்னோ அணியின் இந்த வெற்றி ஆட்டத்தின் இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்த ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த தோல்வியால் ஆர்சிபி ரசிகை ஒருவர் தனது அணியின் தோல்வியைத் தாங்க முடியாமல் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அவர் அழும் புகைப்படம் இணையத்தில் வைரலானதோடு நெட்டிசன்கள் அந்த பெண்ணை கலாய்த்து வருகிறார்கள்.

Leave a Comment