இனி பார்க்கிங் கட்டணம் செலுத்த “பாஸ்டேக்” முறையை பயன்படுத்தலாம்- NPCI அறிவிப்பு!

 சுங்கக்கட்டணத்தை தொடர்ந்து, இனி விமான நிலையங்கள், மால்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்த பாஸ்டேக் முறையை பயன்படுத்தலாம்.

நாம் பலமுறை சுங்கச்சாவடியை கடந்திருக்கிறோம். அப்பொழுது “பாஸ்டேக்” எனஒரு தனி லைன் இருப்பதை அறிந்திருப்போம். அதன் விழியாக செல்லும் வாகனம், நிற்க்காமல் செல்லும். அவ்வாறு செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது என ஒருபோதும் எண்ணி விடாதீர்கள்.

அவர்கள் “பாஸ்டேக்” என்ற கார்டை பயன்படுத்தி சுங்கக் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை இந்த முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும்.

அதன்பின், நமது வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து, நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதற்கு நாம் ரீசார்ச் செய்வது அவசியம்.

இந்த பாஸ்டேக் முறை அறிமுகமானதில் இருந்து, தற்பொழுது வரை பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் நாம் சுங்கச்சாவடியில் நிற்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இந்நிலையில் விமான நிலையங்கள், மால்களில் பார்க்கிங் கட்டணம் செலுத்த இந்த பாஸ்டேக் முறையை பயன்படுத்தலாம்.

டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய பெருநகரங்களில் உள்ள மால்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற தனியார் வாகன நிறுத்துமிடங்களில் பார்க்கிங் கட்டணத்தை செலுத்த ஃபாஸ்டேக்குகள் பயன்படுத்தக்கூடிய வகையில், இயங்கக்கூடிய முறையை அறிமுகப்படுத்துவதாக தேசிய கட்டணக் கழகம் (NPCI) தெரிவித்தது.

இந்த வசதி, முதலாவதாக ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள முக்கிய மால்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற தனியார் வாகன நிறுத்துமிடங்களில் இந்த சேவைகளுக்கு தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் NPCI COO பிரவீனா ராய் தெரிவித்துள்ளார்.

Recent Posts

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

7 mins ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

19 mins ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

56 mins ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

58 mins ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

1 hour ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

2 hours ago