அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் இல்லை – அண்ணாமலை

கூட்டணி கட்சிகளை வளர்க்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள் என அண்ணாமலை பேட்டி. 

இன்று காலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் டெல்லி பயணம் மேற்கொள்ளும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அண்ணாமலை பேட்டி 

அப்போது பேசிய அவர், பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை கக்குபவர்களை கைது செய்வதை விட சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை கைது செய்வதிலேயே திராவிட மாடல் ஆர்வம் காட்டுகிறது. சமூக வலைதளத்தில் சாதாரணமாக பதிவிடுபவர்களை கூட கைது செய்வது ஸ்டாலினின் பலவீனத்தை காட்டுகிறது.

கூட்டணி கட்சிகளை வளர்க்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டால் தான் பாஜகவுக்கு வளர்ச்சி.  பாஜக வளர்ச்சியை அவர்கள் ரசிக்கவில்லை, அவர்கள் கட்சி வளர்ச்சியை நாங்கள் தடுக்கிறோம் என நினைக்கிறார்கள்.

 கர்நாடகாவில் ஒன்பதரை ஆண்டுகள் காவல்துறை பணியில் நான் ஒரு பைசா இலஞ்சம் வாங்கி இருக்கின்றனா? காவல்துறை பணியில் ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினேன் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி நிரூபிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment