நேபால் விமான விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு.!

நேபாளத்தில் உள்ள போகாராவில் இருந்து 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்கள் உட்பட 22 பேருடன் தாரா ஏர் நேற்று விமானம் மாயமானது.  நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் தசாங் பகுதி, சனோஸ்வேர்பிர் என்ற இடத்தில் சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு அந்நாட்டு ராணுவத்தால் விபத்து நடந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு என அதிகாரிகள் தகவல் தெரிவித்து விட்டனர். இதில் 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன அடையாளம் தெரியாதபடி, உடல்கள் சீதைந்துள்ளதாகவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நேபாள காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

இதில் மற்றோரு பெரிய சோகம் என்னவென்றால், தனுஷாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் சிக்கிய 13 நேபாளிகளில் 7 பேர் தனுஷாவின் மிதிலாவை சேர்ந்தவர்கள்.

இதில், 42 வயதான ராஜன் குமார் கோலே மற்றும் அவரது உறவினர்கள் விமான விபத்தில் சிக்கியுள்ளனர் என தகவல்கள் கிடைத்துள்ளது. ராஜனின் தந்தை இந்திரா பகதூர் கோல், தாய் ரம்மையா தமாங், மாமா புருஷோத்தம் கோல், அத்தை துளசாதேவி தமாங், மாமா மகர் பகதூர் தமாங் மற்றும் மைஜு சுகுமாயா தமாங் மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விபத்துக்குள்ளானதால் மிதிலா முனிசிபாலிட்டி கிராம மக்கள் கதறி அழுதனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக கிராம மக்கள் வீட்டில் குவிந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

29 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

33 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

51 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

54 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

54 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago