தமிழக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை! மத்திய அமைச்சருக்கு கர்நாடக துணை முதல்வர் கடிதம்!

கர்நாடகாவின் நீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என டி.கே.சிவகுமார் கடிதம்.

கர்நாடக அரசின் நீர் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும். இரு மாநில அரசுகளிடம் பேசி சுமுகமாக முடிவெடுக்க வேண்டும் என்றுள்ளார்.

நீதிமன்றத்தில் நேரடியாக தீர்ப்பாயம் அமைக்கிறோம் என்று மத்திய அரசு தெரிவிக்க கூடாது. இரு மாநில அரசுகளிடமும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஆட்சி அமைத்து ஒரு மாத காலமே ஆவதால், கர்நாடகா மக்களின் நிலையை எடுத்துரைக்க கால அவகாசம் வேண்டும். உச்சநீதிமன்றத்தில் 12 வாரம் அவகாசம் கேட்டு, அதற்குள் புதிய நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.