தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டி கடந்த 2017 ம் ஆண்டு அனுப்பப்பட்ட 2 மசோதாக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ மற்றும் பல்மருத்துவ பட்ட படிப்புகளுக்கான சட்ட முன்வரைவு 2017 மற்றும் தமிழக மருத்துவ மற்றும் பல்மருத்துவ மேல் படிப்புகளுக்கான சட்ட முன்வரைவு 2017 ஆகிய இரண்டில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டசபையில் தீர்மானம் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே, 2017ம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த சட்டத்துக்கு ஒப்புதல் கோரி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் தமிழ்நாடு பெற்றோர் சங்கம் சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், தமிழக அரசு அனுப்பிய 2 மசோதாக்களும் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மசோதாக்கள் பெறப்பட்ட தேதி மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா…
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…