நெருங்கும் கர்நாடகா தேர்தல்..! காங்கிரசில் இணைந்த 2 முக்கிய புள்ளிகள்…!

ஜேடி (எஸ்)-ன் இரண்டு முக்கிய தலைவர்களான நாராயண கவுடா, பிரபாகர் ரெட்டி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில்  இருந்து வரும் நிலையில், பாஜகவினர் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியினர் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

காங்கிரசில் இணைந்த 2 முக்கிய புள்ளிகள்

இந்த நிலையில், காங், பாஜக முதல் 2 இடத்திலும், ஜேடி(எஸ்) 3ம் இடத்திலும் இருக்கும் என தேர்தல் முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஜேடி (எஸ்)-ன் இரண்டு முக்கிய தலைவர்களான நாராயண கவுடா, பிரபாகர் ரெட்டி ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், இந்த இரண்டு முக்கிய புள்ளிகளும் விளக்கியுள்ளது, ஜேடி (எஸ்) கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.