சிவகங்கை மற்றும் சேலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை…!

சிவகங்கை மற்றும் சேலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சிவகங்கை மற்றும் சேலத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மன்னர் துரைசிங்கம் கல்லூரி எதிரே உள்ள விக்னேஸ்வரன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலை அடுத்து இவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் சேலம் செட்டிசாவடியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment