இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகலி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 16,893,530 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 663,476 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால், 1,532,135 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34,224 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 49,632 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 776 பேர் உயிரிழந்துள்ளனர்.