மத்திய அரசின் “ஸ்வாமித்வா” திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டத்தை இன்று அமல்படுத்தப்படுகிறது.
கிராமப்புற இந்தியாவை மாற்றுவதற்கும், மில்லியன் கணக்கான இந்தியர்களை மேம்படுத்துவதற்கும் ஒரு நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் ‘ஸ்வாமித்வா’ திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், இந்த வெளியீடு கிட்டத்தட்ட ஒரு லட்சம் சொத்து வைத்திருப்பவர்கள் தங்கள் தொலைபேசிகளில் வழங்கப்பட்ட எஸ்எம்எஸ் இணைப்பு மூலம் தங்கள் சொத்து அட்டைகளை பதிவிறக்கம் செய்ய உதவுகிறது. இதைத் தொடர்ந்து அந்தந்த மாநில அரசுகள் சொத்து அட்டைகளை விநியோகிப்பார்கள் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அதன்படி, “உத்தரப்பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகம் ஆகிய 6 மாநில விவசாயிகளுக்கு சொத்து அட்டையினை” வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இதன் முலம், கிராமவாசிகள் கடன்களையும் பிற நிதி சலுகைகளையும் எடுத்துக்கொள்வதற்கு சொத்துக்களை நிதிச் சொத்தாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த காணொளி காட்சியில் பிரதமர் மோடியும் உரையாடுகிறார். மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்து கொள்வார்கள் .
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…