பேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சிகள், அதன் செயல்பாடுகள் குறித்து, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக் மூலம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா , அண்மையில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலம் தங்கள் நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்த மெட்டா செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இதுகுறித்து, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று (வியாழக்கிழமை) பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், மெட்டாவின் புதிய செயற்கை நுண்ணறிவு AI ஆராய்ச்சி, அதற்கான ஆய்வகங்கள், புதிய தரவு மையங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
மெட்டாவின் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி அலெக்சிஸ் பிஜோர்லின் கூறுகையில், AI தொழில்நுட்ப பயன்பாடுகளை உருவாக்குவது முதலீடு அதிகம் என்றாலும், சிஎன்பிசி அறிக்கையின்படி, மேம்பட்ட செயல்திறன் படி முதலீட்டை நியாயப்படுத்துகிறது என்று நிறுவனம் நம்புகிறது. இந்த ஆய்வுகளில் ஏற்படும், அதிகப்படியான வெப்பத்தை குறைக்க திரவ குளிரூட்டல் போன்ற ஆற்றல்-திறனுள்ள தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க மெட்டா அதன் தரவு மைய வடிவமைப்புகளை புதுப்பித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மார்க் ஸூகர்பர்க் வெளியிடப்பட்ட பதிவில், மெட்டாவின் Meta Training and Inference Accelerator (MTIA) சிப் ஆனது குடும்ப சில்லுகளில் முதன்மையானது, இது பல்வேறு AI-சார்ந்த பணிகளுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப MTIA சிப், பயிற்சி பெற்ற AI மாதிரியால் செய்யப்பட்ட கணிப்புகள் அல்லது செயல்களை உள்ளடக்கிய அனுமானத்தின் அடிப்படையில் செயல்பட உள்ளது.
இந்த சிப்பானது பயனர்களின் அளிக்கும் தரவுகள் அடிப்படையில் உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் மெட்டாவின் சில பரிந்துரை செயல்பாட்டிற்கு (நாம் தேடுவதை வைத்து விளம்பரம் வரும்) AI அனுமானம் சிப் கூடுதல் சக்தி அளிக்கிறது.
தரவு மைய சில்லுகளை உருவாக்குவதில் மெட்டாவின் கவனம் இருக்கிறது. ஆன்லைன் சேமிப்பு கிடங்கு (கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள்) வழங்கும் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களிலிருந்து இந்த சிப் வேறுபட்டது. இதன் விளைவுகளை பற்றி மெட்டா உணரவில்லை. இருப்பினும், தங்கள் நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடு அந்நிறுவனத்தின் முயற்சிகளில் வளர்ந்து வரும் ஆர்வத்தை காட்டுகிறது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…