உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தோல்வியடைந்திருந்தால் துப்பாக்கியால் சுட்டிருப்பேன்.! மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பரபரப்பு.!

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கட்சியை பிரிப்பதில் தோல்வியடைந்திருந்தால் தற்கொலை செய்து இருப்பேன் என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக பிரிந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏ அணியினர் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இதனால் உத்தவ் தாக்கரே முதல்வர் பொறுப்பில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தீபக்கேசர்கர் கூறுகையில், கடந்த முறை சிவசேனா கட்சி நிறுவன நாள் விழாவில் ஏக்நாத் ஷிண்டே அவமதிக்கப்பட்டார். அவர் நல்ல மனிதர். அந்த சமயம் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக எம்எல்ஏக்களை பிரிப்பதில் தோல்வி ஏற்பட்டு இருந்தால் நான் அப்போதே துப்பாக்கியால் என் தலையில் சுட்டு இருப்பேன் என பரபரப்பு கருத்தை அண்மையில் தெரிவித்து உள்ளார்.