நன்கொடை அளித்த சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்த மதுரை எம்பி.!

அன்னவாசலில் சோறு அளித்த  சூர்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றி .”ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்வி பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. அது மட்டுமின்றி பல திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அதில் பெப்சி தொழிலாளர்களுக்கு பல பிரபலங்கள் நிதியுதவி வழங்கினார். அதில் பெப்சி தொழிலாளர்களின் நலனை கருதி முதலில் 10 லட்சத்தை நிதியுதவியாக வழங்கியது சூர்யா என்பது அனைவரும் அறிந்ததே. 

இது மட்டுமல்லாமல் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை சார்பாக பல்வேறு உதவிகளை ஏழைகளுக்கு செய்து வருகிறார். தற்போது மதுரை எம்பியான வெங்கடேசன்  ‘அன்னவாசல்’ என்ற திட்டம் மூலம் மதுரையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மற்றும் பல பகுதிகளிலும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். இதற்கு பலர் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா அன்னவாசல் திட்டத்திற்காக ரூ. 5 லட்சத்தை நிதி யுதவியாக வழங்கியுள்ளார். இது குறித்து மதுரை எம்பியான வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நல்ல முன்னெடுப்புகள் பல நல்ல உள்ளங்களை ஒன்றிணைத்து கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 லட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறுட்ட அளித்த  சூர்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றி .

“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்வி பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது ‘ஆகாரம்’ மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன் வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது சூர்யாவின் இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

1 hour ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

8 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

14 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

14 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

15 hours ago