தமிழ்நாடு

விஷச்சாராய தடுப்பு குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு இதுவரை 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக விஷச்சாராயம் தயாரித்து விற்றதாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உய்ரநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவானது இன்று, நீதிபதி கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு தொடர்ந்த அதிமுக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் செல்வம், கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதன் பயன்பாட்டை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. விஷச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மெத்தனால் புதுச்சேரியில் இருந்து மீட்கப்பட்டது அதனால், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை இதில் எழுகிறது, எனவே இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிப்பதே சரியானது என்று அவர் வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  தலைமையில் ஒருநபர் கமிஷனை தமிழக முதல்வர் நியமித்துள்ளார் என்று கூறினார்.

இதனை அடுத்து நீதிபதி அமர்வு கூறுகையில், இது மற்ற வழக்குகளை போல சாதாரண பிரச்சினை இல்லை. இது அதிகாரிகளின் செயலற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை பற்றியது. இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்த ஓராண்டில் இதுபோன்ற சம்பவம் நடந்தபோது, ​​அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை நீதிமன்றத்தில் அரசு கூற வேண்டும். கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமான விஷச்சாராயம் எப்படி எளிதாகக் கிடைக்கின்றன.?

இந்தச் சம்பவங்களைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள், எந்தெந்த அரசு அதிகாரிகளை இடைநீக்கம் மற்றும் இடமாற்றம் செய்துள்ளீர்கள் என்ற விவரங்களை அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையங்களின் விவரங்களையும் இதில் குறிப்பிடப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இந்த வழக்கை வரும் புதன்கிழமைக்கு (ஜூன் 26) ஒத்திவைத்தது சென்னை உய்ரநீதிமன்ற நீதிபதி அமர்வு.

Recent Posts

முந்துங்கள் வருங்கால வங்கி ஊழியர்களே …! UCO வங்கியில் அப்ரண்டிஸ் வேலை ..!

UCO வங்கி : யுனைடெட் கமர்ஷியல் வங்கி லிமிடெட் (UCO) வங்கியில் அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 544…

2 mins ago

நல்லா நோட் பண்ணிக்கோங்க மக்களே! நாளை இந்த இடங்களில் மின்தடை!

மின்தடை  : நாளை ( ஜூலை 6 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். தென் சென்னை - ஐய்யப்பன்தாங்கல் காட்டுப்பாக்கம்,…

17 mins ago

எடப்பாடி பழனிச்சாமி ஓர் நம்பிக்கை துரோகி.? அண்ணாமலை கடும் தாக்கு.!

விழுப்புரம்: நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு பொருத்தமாக இருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.. இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

24 mins ago

ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா.. கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி.!

குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் 'குபேரா' படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர்.…

33 mins ago

மத்திய அரசு ஊழியர்களின் வைப்புநிதி (PF) வட்டி விகிதம் மாற்றமா? வெளியனாது அப்டேட்.!

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) மற்றும் இதேபோன்ற பிற வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீத வட்டி விகிதமாக…

1 hour ago

வாயால் வடை சுடும் அண்ணாமலை… இபிஎஸ் கடும் விமர்சனம்.!

கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். பொய் வாக்குறுதிகளை கூறுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற…

1 hour ago