மத்திய பிரதேசத்தில் உள்ள மின்சார வாரியம் ஏழரை லட்சம் பயனர்களின் மின்சார இணைப்பை துண்டிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் மின்சார செலவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பலர் மின்சார கட்டண உயர்வு குறித்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள மேற்கு பிராந்திய மின் விநியோக நிறுவனம் ஏழரை லட்சம் பயனர்களின் மின்சார இணைப்பை துண்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தலைமை பொது மேலாளர், கடந்த பல ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால் நிறுவனத்தின் வருமானம் சரிந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் இந்த மின் விநியோக நிறுவனம் 16 மாவட்டங்களில் உள்ள 4.5 மில்லியன் பயனர்களுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்வதாகவும், இதில் ஏழரை லட்சம் பயனர்கள் தங்களது மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை, அதற்காக பலமுறை எச்சரித்துள்ளதாகவும், இருப்பினும் அவர்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்பதால் அவர்களது மின்சார இணைப்பை துண்டிப்பதற்பான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…