அதிகாலை நடந்த சோகம்.. பிக்-அப் வாகனம் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு.. 20 பேர் காயம்..!

Madhya Pradesh: மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பிக்கப் வாகனம் கவிழ்ந்ததில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் . காயமடைந்தவர்கள் ஷாபுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

READ MORE- நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு.. கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகான்..!

இந்த பிக்கப் வாகனத்தில் சுமார் 45 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3 மணி முதல் 4 மணி அளவில் நடைபெற்றுள்ளது என கூறபடுகிறது. காவல்துறையின் கூற்றுப்படி, கிராம மக்கள் அமாஹி தியோரி கிராமத்தில் இருந்து மாண்ட்லா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

READ MORE- தீ விபத்து ‘வதந்தி’.! அலறி அடித்து ஓடிய பயணிகள்… ரயில் மோதி 2 பேர் பலி.!

திரும்பும் போது, ​​ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து 20 அடிக்கு கீழே உள்ள வயலில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கலெக்டர் விகாஸ் மிஸ்ரா, எஸ்பி அகில் படேல் ஆகியோர் ஷாபுரா மருத்துவமனைக்கு வந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார் .

Leave a Comment