Categories: இந்தியா

மக்களவை தேர்தல்: ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே 4 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணி கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், வரும் தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒன்றை குறிக்கோளுடன் இந்தியா கூட்டணி கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த கூட்டணியில் சில கட்சிகள் வெளியேறினாலும், தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் டெல்லி, ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More – பதக்கம் வென்ற வீரர்களுக்கு லட்ச லட்சமாய் பரிசுத்தொகை.! மத்திய அமைச்சர் அறிவிப்பு.!

டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான முகுல் வாஸ்னிக், வரும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே 4 மாநிலங்களில் தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, டெல்லியில் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன.

அதில், புது டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய 4 இடங்களில் ஆம் ஆத்மியும், சாந்தினி சௌக், வடகிழக்கு மற்றும் வடமேற்கு ஆகிய 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. குஜராத்தில் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸுக்கு 24 இடங்களும், ஆம் ஆத்மிக்கு 2 இடங்களும் (பரூச் மற்றும் பாவ்நகரில்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று, ஹரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 9  இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு (குருக்ஷேத்ரா) இடத்திலும் போட்டியிடுகிறது. மேலும், சண்டிகரில் காங்கிரஸ் போட்டியிடுவதாகவும், அதேபோல் கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Recent Posts

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

5 mins ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

11 mins ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

20 mins ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

30 mins ago

மழை நேரத்தில் ஏசி போடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன ?

சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம்…

34 mins ago

சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும்…

35 mins ago